“கயல்” சீரியல் படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய சைத்ரா ரெட்டி – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
சன் டிவியில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட “கயல்” சீரியலில் நடிகர் சஞ்சய்க்கு ஜோடியாக நடித்து வரும் சைத்ரா ரெட்டிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிபட்டதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகை சைத்ரா ரெட்டி:
தமிழ் சின்னத்திரையில் முதன்முறையாக விஜய் டிவி கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் அறிமுகமானவர் சைத்ரா ரெட்டி. அதன் பின் அவர் ஜீ தமிழ் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்து மக்கள் பிரபலமானார். அதில் அவர் கொடூரமான வில்லியாக காட்டப்பட்டார். இவர் சொந்த ஊர் பெங்களூரு. சமீபத்தில் அவருடைய திருமணம் கோலாகலமாக நடத்தப்பட்டது. திருமணத்திற்கு பின்பும் சீரியல்களில் அதே அழகுடன் நடித்து வருகிறார்.
புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% DA உயர்வு – 7வது ஊதியக் குழு பரிந்துரை!
தற்போது யாரடி நீ மோஹினி சீரியல் முடிவடைந்த பின் அவர் புதிதாக சன் டிவியில் “கயல்” சீரியலில் நடிகர் சஞ்சய் உடன் ஜோடி சேர்ந்து இருக்கிறார். இதுவரை நெகடிவ் கதாபாத்திரத்தில் அவரை பார்த்த ரசிகர்களுக்கு தற்போது கதாநாயகியாக பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் பார்க்க புதிதாக இருக்கிறது. அதனால் அந்த சீரியல் ரசிகர்களின் பேராதரவை பெற்று முன்னணி சீரியலாக இருக்கிறது. மேலும் இந்த சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நடிகர் சஞ்சய் குளிர் 100 டிகிரி படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர்.
இந்நிலையில் நடிகை சைத்ரா ரெட்டி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பல போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். இன்ஸ்ட்டாவில் அவருக்கு பல லட்சம் பாலோவர்ஸ் இருக்கின்றனர். அவர் தற்போது புதிய பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கயல் சீரியல் ஷூட்டிங் போது தனக்கு அடிபட்டுவிட்டதாக அதில் தெரிவித்து இருக்கிறார். மேலும் அந்த சீரியலில் இருக்கும் அவரின் பைக்கில் இருந்து கீழே விழுந்ததாகவும் பதிவிட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.