மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) – ஜூலை 1 முதல் செயல்படுத்த உத்தரவு!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR தொகை 28% மாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2021 ஜூலை 1 ஆம் தேதி முதல் இந்த தொகையை செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
அகவிலைப்படி அமல்
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கான DA , DR நிவாரணங்கள் திரும்ப கொடுக்கப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் 28% மாக உயர்த்தப்பட்டுள்ள இந்த DA , DR தொகையை ஜூலலை 1 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு செயல்படுத்த நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக காவலர்களுக்கு முக்கிய அறிவிப்பு – டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு!
இது தொடர்பாக நிதி அமைச்சகத்தின் செலவுத்துறை கடந்த ஜூலை 20 ஆம் தேதி அலுவலக மெமோராண்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி ஜனவரி 01, 2020 (4%), ஜூலை 01, 2020 (3%) மற்றும் ஜனவரி 01, 2021 (4%) க்கான DA உயர்வு திருத்தப்பட்டு, ஜூலை 21, 2021 ஆம் தவணைக்கான DA விகிதத்துடன் சேர்த்து மத்திய அரசு ஊழியர்களுக்கு 28% DA கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த திருத்தப்பட்ட விகிதங்கள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் என்ற உத்தரவை வெளியிட்ட நிதி அமைச்சகம் அதை செயல்படுத்துவதற்கான கையொப்பமிட்டுள்ளது. ஆனால் மேற்கண்ட உத்தரவில் 2020 ஜனவரி 1 முதல், 2021 ஜூன் 30 வரையிலான காலத்திற்கு நிலுவைத் தொகை (arrears) வழங்கப்படாது எனும் தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது DSE ன் கீழ் சிவில் சர்வீஸ் ஊழியர்களுக்கு பொருந்தும். அதே நேரத்தில் ஆயுதப்படை வீரர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களுக்கான தனி உத்தரவை பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகம் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.