பாக்கியாவை ஏமாற்றியதால் கோபியை வெறுக்கும் இனியா – அதிரடி ப்ரோமோ ரிலீஸ்!
ராதிகாவுக்கும் கோபிக்கும் இடையேயான உறவு பற்றி குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே தெரிந்துவிட்டது. இந்நிலையில், பாக்கியாவை ஏமாற்றியதற்காக இனியா மொத்தமாகவே கோபியை வெறுக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியின் மொத்த சுயரூபமும் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. ஆரம்பத்தில் ஈஸ்வரி கோபி இப்படி செய்திருக்கவே மாட்டான் என கோபி மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தார். ஈஸ்வரி மட்டுமல்லாமல் பாக்கியாவும் கோபி மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், எப்பொழுது ராதிகாவையும் கோபியையும் பாக்கியா ஒன்றாக பார்த்தாரோ கோபியின் அத்தனை வேஷமும் கலைந்துவிட்டது. இதற்கு பிறகு தான் பாக்கியாவிற்கு பல கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, ராதிகா வீட்டுக்கு வரும் போதெல்லாம் ஏன் கோபி அவ்வளவு பயந்தார் எனவும், ராதிகாவை பார்க்கவே கூடாது என ஏன் மறுத்தார் என்பதற்கான அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிட்டது. ஆனால், பாக்கியா தான் முட்டாள் தனமாக கோபியை நம்பி கொண்டிருந்தார். தற்போது உண்மைகள் அனைத்தும் தெரிய வந்ததும் பாக்கியா வீட்டை விட்டே கிளம்புகிறார். இதற்கு பிறகு கோபி இனியாவிடம் இது பற்றி பேசுகிறார். பின்பு, இனியா அம்மாவை இந்த அளவுக்கு ஏமாற்றுவீர்கள் என்று கனவில் கூட நினைக்கவில்லை என கூறுகிறார்.
கதாநாயகனாக களமிறங்கும் விஜய் டிவி “குக் வித் கோமாளி” ரக்ஷன் – வைரலாகும் புகைப்படம்!
மேலும், இனியாவிடம் கோபி ஒரு முறை உன் அம்மாவும் நானும் பிரிந்து விட்டால் நீ யாருடன் செல்வாய் என கேட்டிருப்பார். அப்போது கோபி எதற்காக கேட்டார் என்பது இனியாவிற்கு தற்போது தான் புரிய வருகிறது. உடனே, கண்டிப்பாக நான் உங்களுடன் வரவே மாட்டேன். அம்மாவுடன் தான் செல்வேன். எனக்கு உங்களை சுத்தமாக பிடிக்கவே இல்லை. இந்த வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை என இனியா கூறி கதறி அழுகிறார். இருந்தாலும் கூட இனியா மீது கோபி உண்மையாகவே அன்பு செலுத்தி வந்தார். இதற்கு பிறகு கோபி என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.