தாய் மொழியில் மருத்துவ கல்லூரிகள் திறப்பு – பிரதமர் மோடி உரை!!
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தாய் மொழியில் மருத்துவ கல்லூரி திறக்க வேண்டும் என கனவு இருப்பதாக அசாமில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இந்திய பிரதமர் மோடி தெரிவித்தார்.
தாய் மொழியில் மருத்துவ கல்லூரிகள்:
அசாம் மாநிலத்தில் உள்ள தேகியாஜூலியில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ரூ.8210 கோடி செலவில் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய மாவட்ட சாலைகள் மேம்படுத்தும் “அசாம் மாலா” திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் பிஸ்வாந்த் மற்றும் சாரைடியோ மாவட்டங்களில் புதிதாக தொடங்கப்பட உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
H1B விசா பெற மார்ச் 9 முதல் விண்ணப்ப பதிவு துவக்கம் – அமெரிக்க குடியேற்றத்துறை அறிவிப்பு!!
தொடர்ந்து பேசிய அவர், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தாய் மொழியில் மருத்துவ கல்லூரிகள் திறக்க வேண்டும் என எனக்கு கனவு உள்ளது என தெரிவித்தார். மேலும் சட்டமன்ற தேர்தலுக்கு பின் அசாமில் உள்ள மாவட்டங்களில் தாய் மொழியில் மருத்துவ கல்லூரிகள், தொழிநுட்ப கல்லூரிகள், அமைக்கப்படும். இந்த மருத்துவ கல்லூரிகள் மூலமாக மருத்துவ சேவை மேம்படும். மேலும் சாமானிய மக்கள் கூட மருத்துவமனைக்கு செல்லாமல் மருத்துவர்கள் அவர்களை தேடி சென்று மருத்துவம் செய்ய வழிவகை செய்கிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்