Infosys நிறுவனத்தில் 45,000 பேருக்கு வேலைவாய்ப்பு – புதிய நிதியாண்டில் பணியமர்த்த திட்டம்!
இன்போசிஸ் நிறுவனத்தில் சிஓஓ பிரவின் ராய் அடுத்த நிதியாண்டில் நிறுவனத்தில் புதிதாக 45,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு திட்டம்:
கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தின் விளைவால் உலகளாவிய பொருளாதாரத்தை நிறுவனங்கள் மூடப்பட்டது. இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் மற்றும் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில், மூடப்பட்ட நிறுவனங்கள் மீண்டும் திறப்பதற்கும் நிலைமையை மேம்படுத்துவதற்கும் முழு உலகமும் முழு வேகத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் விளைவால் பல நாடுகளின் பொருளாதாரம் மெதுவாக மீண்டும் முன்னேறத் தொடங்கியுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு, 25% தீபாவளி போனஸ் – வெளியாகுமா?
இன்போசிஸ் நிறுவனத்தின் சிஓஓ பிரவின் ராய் கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவிற்கு தற்போது நிறுவனங்களுக்கு இடையில் திறமைகள் போர் இருப்பதாக அறிவித்துள்ளார். ஒவ்வொரு நிறுவனமும் திறமையானவர்களை தங்கள் நிறுவனத்தில் பணியமர்த்த பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். முன்னதாக அடுத்த 2022ம் நிதியாண்டில் 35,000 புதியவர்களை வேலைக்கு அமர்த்துவதாக அறிவித்த நிலையில், தற்போது பணியமர்த்தல் எண்ணிக்கையை 45,000 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது.
ஒரு வாரத்தில் 6 நாட்கள் வங்கிகள் விடுமுறை – RBI பட்டியல்! வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
அக்டோபர் மாதம் முதல் அனைத்து மூத்த தலைவர்களும் வாரத்திற்கு ஒரு முறையாவது அலுவலகத்திற்கு வருமாறும், ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒரே நேரத்தில் அதிக அளவில் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரும் வாய்ப்பு இல்லை. இந்தியாவில் 86 சதவீத ஊழியர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றிருப்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.