Infosys நிறுவனத்தில் 35,000 பேருக்கு வேலைவாய்ப்பு – புதிய நிதியாண்டில் திட்டம்!

2
Infosys நிறுவனத்தில் 35,000 பேருக்கு வேலைவாய்ப்பு - புதிய நிதியாண்டில் திட்டம்!
Infosys நிறுவனத்தில் 35,000 பேருக்கு வேலைவாய்ப்பு - புதிய நிதியாண்டில் திட்டம்!
Infosys நிறுவனத்தில் 35,000 பேருக்கு வேலைவாய்ப்பு – புதிய நிதியாண்டில் திட்டம்!

உலகளாவிய தகவல் தொழிநுட்ப சேவையில் முன்னணி இடத்தை வகிக்கும் இன்போசிஸ் நிறுவனம் வரும் 2020 ஆம் ஆண்டில் 35,000 கல்லூரி பட்டதாரிகளை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக அதன் தலைமை இயக்க அதிகாரி பிரவீன் ராவ் தெரிவித்துள்ளார்.

பணியமர்த்தல்:

தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக திகழும் இன்போசிஸ் நிறுவனம் புதிய ஊழியர்களை பணியமர்த்தவுள்ளது. முன்னதாக கடந்த மார்ச் காலாண்டில் 2.59 லட்சமாக இருந்த இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கையானது, ஜூன் காலாண்டின் இறுதியில் 2.67 லட்சமாக அதிகரித்துள்ளது. இதனிடையே வரும் 2022 ஆம் ஆண்டில் இன்போசிஸ் நிறுவனத்தில் கூடுதலாக 35 ஆயிரம் புதிய ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என அந்நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி பிரவீன் ராவ் தெரிவித்துள்ளார்.

ஜூலை 22 முதல் MasterCard புதிய கார்டுகள் வழங்க தடை – RBI அறிவிப்பு!

அதாவது ‘டிஜிட்டல் திறமைகளுக்கான தேவைகள் அதிகரிக்கும் போது, தொழில்துறையில் முன்னேற்றத்தை கொண்டுவருவது காலத்தின் சவாலாக உள்ளது. அதன் படி 36,000 கல்லூரி பட்டதாரிகளை வரும் 2022 ஆம் நிதியாண்டிற்குள் பணியமர்த்தி, இன்போசிஸ் சேவைகளை உலகளவில் விரிவுபடுத்துவதாக நாங்கள் திட்டமிட்டுள்ளோம்’ என தெரிவித்துள்ளார். முன்னதாக இன்போசிஸில் தகவல் தொழில்நுட்ப சேவைகளில் தன்னார்வத் தொகையானது ஜூன் காலாண்டில் 13.9% ஆகவும், மார்ச் காலாண்டில் 10.9% ஆகவும் இருந்தது.

அந்த வகையில் இன்போசிஸ் வரும் 2022 ஆம் நிதியாண்டிற்கான கணிப்பை 22% முதல் 24% ஆக எதிர்பார்த்துள்ளது என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் MD சலீல் பரேக் தெரிவித்துள்ளார். பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இன்போசிஸ் நிறுவனம் கடந்த காலாண்டு லாபத்தில் 22.7% உயர்ந்து, அதன் நிகர லாபமானது ஜூன் மாதத்தில் 5,195 கோடியாக அதிகரித்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முந்தைய காலத்திலிருந்து கணக்கிடுகையில், அதன் வருவாய் 17.9% உயர்ந்து 27,896 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

பொதுவாக கிளவுட் கம்ப்யூட்டிங், டிஜிட்டல் கட்டண உள்கட்டமைப்பு, கிரிப்டோ இயங்குதளங்கள் முதல் சைபர் பாதுகாப்பு வரையிலான சேவைகளில் உலகளாவிய நிறுவனங்களின் முதலீடுகளை அதிகரிப்பதில் இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளன. அந்த வகையில் இந்த வார தொடக்கத்தில், இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான TCS, அதன் காலாண்டு லாபத்தில் 29% உயர்வு பெற்றுள்ளது. இது கிளவுட் சேவைகள் மற்றும் அதன் முக்கிய வங்கி மற்றும் நிதி வணிகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. தவிர வரும் நாட்களில் 40,000 க்கும் மேற்பட்ட புதிய ஊழியர்களை பணியமர்த்த இருப்பதாக TCS அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!