மீண்டும் இயங்க தொடங்கிய வருமான வரி தளம் – இன்போசிஸ் நிறுவனம் தகவல்!
இந்தியாவின் முன்னணி தொழிநுட்ப நிறுவனமான இன்போசிஸ் உருவாக்கிய புதிய வருமான வரித்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது முதலே சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது. இதனை அந்நிறுவனம் சரி செய்திருப்பதாக தற்போது அறிவித்துள்ளது.
அரசு சம்மன்
மத்திய அரசு, இன்போசிஸ் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய வருமான வரி இணையதளத்தை கடந்த ஜூன் 7 ஆம் தேதி அன்று அறிமுகப்படுத்தியது. இந்த இணையதளம் பயன்பாட்டுக்கு வந்த சில மணி நேரங்களிலேயே ஆதார் சரிபார்ப்புக்காக OTP ஐ உருவாக்க இயலாமை, பாஸ்வர்ட் உருவாக்கம் குறைபாடுகள், பழைய வருவாய்க்கு பழைய தரவை இணைக்கத் தவறியது போன்ற சிக்கல்களை ஏற்படுத்த தொடங்கியது.
13 MP கேமரா, ஆண்ட்ராய்டு கோ எடிசனுடன் வரும் JioPhone Next – மலிவு விலை மான்ஸ்டர்!
இதை தொடர்ந்து இந்த குறைபாடுகளை சரிசெய்யுமாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்போசிஸ் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணுவதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக புதிய வருமான வரி இணையதளம் முழுமையாக செயலிழந்தது. இதையடுத்து மத்திய நிதி அமைச்சகம் இன்று (ஆகஸ்ட் 23) இன்போசிஸ் MD மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக்கை வரவழைத்து பேசினது.
இதையடுத்து சிக்கல்களுக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்த அவர், தற்போது அந்த இணையதளம் முறையாக செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டில், இன்போசிஸ் நிறுவனம் அடுத்த தலைமுறைக்கான வருமான வரி தாக்கல் முறையை 63 நாட்களில் இருந்து ஒரு நாளாக திருப்பிச் செலுத்துவதற்கான நேரத்தை குறைக்கவும், பணத்தைத் திருப்பித் தரவும் மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்தது.
TN Job “FB Group” Join Now
இதற்கு இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை இன்போசிஸுக்கு ரூ.164.5 கோடி செலுத்தப்பட்டது. இதையடுத்து புதிய வருமான வரித்துறை போர்ட்டலை உருவாக்க மற்றும் நிர்வகிக்க ஒப்பந்தம் பெறுவதற்கு முன்பு, சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க்கை உருவாக்க அரசு சுமார் ரூ .1,380 கோடி ஒப்பந்தம் செய்திருந்தது. இன்போசிஸ் நிறுவனம் முன்னெடுத்த இந்த முக்கிய திட்டங்கள் சிக்கல்களை கண்டது குறிப்பிடத்தக்கது.
பழைய முறையே என் போன்ற மூத்த குடிமக்களுக்கு சாதகமாக இருந்தது ஆனால் தற்போது உள்ள நடைமுறை சிக்கலான தாக உள்ளது.