Infosys & HCL நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் WFH முறை? முழு விவரம் இதோ!

0
Infosys & HCL நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு - முடிவுக்கு வரும் WFH முறை? முழு விவரம் இதோ!
Infosys & HCL நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு - முடிவுக்கு வரும் WFH முறை? முழு விவரம் இதோ!
Infosys & HCL நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் WFH முறை? முழு விவரம் இதோ!

இந்திய தகவல் தொழில்நுட்ப உலகில் முன்னணி இடத்தை வகித்திருக்கும் இன்ஃபோசிஸ் மற்றும் HCL நிறுவனங்கள், தங்களது ஊழியர்கள் WFH முறையை முடித்து தானாக முன்வந்து அலுவலகத்திற்கு திரும்புவதை எதிர்பார்த்துள்ளன.

WFH முறை

கொரோனா நோய் தொற்று ஓய்ந்து வந்ததற்கு பிறகு உலகளவில் தகவல் தொழில்நுட்ப சேவைகள் விரிவடைந்து வருகிறது. இந்த சேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்தியாவில் உள்ள முன்னணி IT நிறுவனங்கள் புதிய பணியமர்த்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு பிறகு TCS, இன்ஃபோசிஸ் மற்றும் HCL நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை மீண்டுமாக அலுவலகத்திற்கு வரவழைத்து வருகின்றன. இதில் TCS, இன்ஃபோசிஸ் நிறுவனங்கள் ஹைப்ரிட் வேலை மாதிரியை தொடரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இப்போது, இன்ஃபோசிஸைப் போலவே HCL டெக்னாலஜிஸ் நிறுவனமும் தனது ஊழியர்களுக்கு ஹைப்ரிட் வேலை மாதிரியை தொடர முடிவு செய்துள்ளது. அந்த வகையில் மார்ச் மாதத்தில் HCL நிறுவனம் ஹைப்ரிட் வேலை முறையில் தொடரும் என்று கூறியது. ஆனால், மூன்றாவது பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான HCL இன்னும் கண்காணிப்பு கட்டத்திலேயே நகர்ந்து வருகிறது. இதற்கிடையில் பல நிறுவனங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஊழியர்களை வரவேற்க முடிவு செய்திருந்தாலும், சில நிறுவனங்கள் இன்னும் அலுவலக நெறிமுறைகளை வழங்கவில்லை.

இருந்தபோதிலும், இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், விப்ரோ மற்றும் டெக் மஹிந்திரா உள்ளிட்ட முக்கிய ஐடி நிறுவன தொழிலாளர்கள் தானாக முன்வந்து அலுவலகங்களில் பணிபுரிகின்றனர். இப்போது 90 சதவீத ஐடி துறை பணியாளர்கள் தொலைதூரத்தில் பணிபுரியும் நேரத்தில் இந்த தன்னார்வத் திரும்புதல் கவனம் பெற்றுள்ளது. இது குறித்து இன்ஃபோசிஸின் ஹெச்ஆர் எக்ஸிகியூட்டிவ் துணைத் தலைவர் ரிச்சர்ட் லோபோ கூறுகையில், ‘எங்கள் பணியாளர்களில் 94 சதவீதம் பேர் இன்னும் தொலைதூரத்தில் இருந்து செயல்படுகிறோம்.

மத்திய அரசின் PM கிசான் நிதியுதவி திட்டம் – பயனாளியின் பட்டியலை சரிபார்ப்பது எப்படி? முழு விவரம் இதோ!

எவ்வாறாயினும், எங்கள் அலுவலக இடங்களில் இருக்கும் அதிகமான ஊழியர்கள் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு அலுவலகத்திற்கு வருவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேலும் இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். இதே போல HCL டெக்னாலஜிஸ் நிறுவனமும் ஒரு கலப்பின வேலை மாதிரி தொடர்ந்தாலும் கூட அதன் வளாகங்களுக்கு வரும் ஊழியர்களின் எண்ணிக்கையில் ஒரு உயர்வை அறிவித்தது. இப்போது, HCL நிறுவனம் தனது ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து கலப்பின மாடலில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!