இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த தகவல் – மத்திய அரசு கேள்வி!
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை எந்த மாநிலங்களும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ள மாநிலங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு:
நாடு முழுவதும் 2021 ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் அது தொடர்பான கள நடவடிக்கைகள் அடுத்த உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. தற்போது நிலைமை சரியான நிலையில் அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதனால் அரசாங்கத் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் நுகர்வு, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய பிற ஆய்வுகளின் நம்பகத்தன்மையற்ற மதிப்பீடுகள், கொள்கை மற்றும் நலவாரிய நடவடிக்கைகளைத் தீர்மானிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியமாகிறது.
Exams Daily Mobile App Download
2020 ஆம் ஆண்டு இந்தியா மட்டுமல்லாமல் 18 நாடுகள் தங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒத்திவைத்தன. இந்தியாவில் அரசு நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளதாலும், கொரோனா நோய் கட்டுப்பாடுகளை அரசு விலக்கி இருப்பதாலும் மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பை தொடங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ள மாநிலங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக எந்த ஒரு பரிசீலனையும் இல்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
அம்மா உணவகங்கள் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி? அரசிடம் ஆலோசனை
மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்தப்போகிறதா என மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய தங்களின் விவரங்களை தாமாகவே முன்வந்து ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். அதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் 10 இயக்குனர்களை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது