திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – அலிபிரி நடைபாதை பணிகள் தீவிரம்!
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திருமலைக்கு செல்லும் அலிபிரி நடைபாதையை சீராக்கும் பணிள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை 900 படிகள் வரை மேற்கூரை பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
அலிபிரி நடைபாதை பணிகள்:
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் மிகவும் பிரபலமானது. ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவர். நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் வருவது வழக்கம். திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் திருக்கோயிலுக்கு திருப்பதி அடிவாரத்தில் இருந்து சாலை மார்க்கமாக வாகனங்களில் பக்தர்கள் பயணிக்கின்றனர். மேலும் வேண்டுதல் காரணமாக அலிபிரி நடைபாதை மூலம் நடந்தே மலைக்கு பக்தர்கள் செல்கின்றனர்.
அரசு ஊழியர்களுக்கு 30% சம்பள உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!
இந்த நடைபாதையில் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தேவஸ்தானம் உத்தரவிட்டது. அதில் அலிபிரி வழித்தடத்தை சீரமைக்க ரூ.25 கோடி செலவாகும் என்று தெரிவித்தனர். சீரமைப்பு பணிகளுக்காக ஜூன் ஒன்று முதல் ஜூலை 31ஆம் தேதி வரை இரண்டு மாதங்களுக்கு அலிபிரி நடைபாதை மூடப்பட்டுள்ளது. ஸ்ரீவாரி மெட்டு பகுதி வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
ஆனால் கோவிட்-19 பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் பணிகள் முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது மாநிலம் முழுவதும் ஊரடங்கில் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. இதனால் பக்தர்கள் வருகை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே பணிகளை விரைவாக முடிக்க தேவஸ்தானம் உத்தரவிட்டது. இதன் காரணமாக அலிபிரி நடைபாதையில் வேகமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 900 படிகள் வரை மேற்கூரை பணிகள் நிறைவு பெற்றுள்ளது என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.