தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் “Influenza” காய்ச்சல் – அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள அரசு!

0
தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும்
தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் "Influenza" காய்ச்சல் - அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள அரசு!
தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் “Influenza” காய்ச்சல் – அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள அரசு!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தற்போது influenza காய்ச்சல் வேகமாக பரவி கொண்டிருக்கிறது. அதனால் இதனை தடுக்கும் விதமாக அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ள தகவல் குறித்து விரிவாக பார்ப்போம்.

சிறப்பு காய்ச்சல் முகாம்

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுவதுமாக தளர்த்தப்பட்டு அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டில் (2022-2023) அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் குழந்தைகள் மத்தியில் influenza காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை தமிழகத்தில் 1000க்கும் மேற்பட்டவர்கள் influenza காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும் தற்போது பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் மாணவர்கள் ஒன்று கூடி விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இதனால் குழந்தைகளுக்கிடையே வெகு விரைவில் இந்த காய்ச்சல் பரவி வருகிறது. அதனால் influenza காய்ச்சல் குறையும் வரை தமிழகத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அரசியல் கட்சியினரில் இருந்து பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கிடையே புதுச்சேரியில் காய்ச்சல் காரணமாக வருகிற 25ம் தேதி வரை 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இதை செய்யலேனா பணம் கிடையாது! அரசின் உத்தரவு!

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து தமிழகத்தில் influenza காய்ச்சல் பரவலை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் influenza காய்ச்சல் பரவலை தடுக்கும் பொருட்டு கடலூரில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற்றது. இதை தொடர்ந்து நாளை தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!