தமிழகத்தில் அதிவேகமெடுத்த இன்புளுயன்ஸா காய்ச்சல் – 1000 – ஐ நெருங்கும் பாதிப்பு! அச்சத்தில் மக்கள்!
தமிழக மக்கள் கொரோனா மற்றும் குரங்கு அம்மை வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டு வரும் வேளையில் தற்போது இன்புளுயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை மாநிலம் முழுவதும் 965 பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்புளுயன்சா காய்ச்சல்:
தமிழகத்தில் தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த காலநிலை மாற்றத்தால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த மாதம் டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு உள்ளதாக தகவல் வந்தது. இதனையடுத்து தமிழக சுகாதாரத்துறை தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியது. அதாவது சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணிகள் நடைபெற்றது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகாத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் அடுத்த தாக்குதலாக இன்புளுயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக இந்த காய்ச்சலுக்கு குழந்தைகள் அதிகம் ஆளாகி வருகின்றனர். நேற்று சென்னை எழும்பூர் மருத்துவமனையில் ஒரே நாளில் மட்டும் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இன்புளுயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மட்டுமில்லாது மற்ற மாவட்டங்களிலும் இன்புளுயன்ஸா காய்ச்சல் வேகமெடுத்து வருகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் 965 பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இதுவரை இல்லை, சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் இருப்பு உள்ளது. ஏதேனும் மருந்து தட்டுப்பாடு இருந்தால் பொதுமக்கள் 104 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். மேலும் தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்