தமிழகத்தின் 9 மாவட்டங்களில் தனி அலுவலர் பதவிக்காலம் – டிசம்பர் 31 வரை நீட்டிப்பு!
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தனி அலுவலர் பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல்:
தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக 9 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தற்போது வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த 9 மாவட்டங்களில் தனி அலுவலர் நியமனம் செய்யப்பட்டனர். தனி அலுவலர் என்றால் உள்ளாட்சிகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் நிர்வாகத்தை வழிநடத்த அரசு சட்டங்கள் மூலம் நியமிக்கப்படும் அரசு அலுவலர்.
ஜூன் 28ம் தேதி முதல் முகக்கவசம் கட்டாயமில்லை – இத்தாலி அரசு அறிவிப்பு!!
அதே நேரத்தில் தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 16 வது சட்டசபை கூட்டத் தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் இதற்கான முக்கிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் தனி அலுவலர் பதவிக்காலம் 6 மாதம் நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் வருகிற டிசம்பர் 31 வரை தனி அலுவலர் பதவிக்காலம் நீடிக்கும் மசோதா தற்போது சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 30ம் தேதி முதல் தனி அலுவலர்கள் பதவிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கோரி தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.