10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தனித்தேர்வு – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

0
10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தனித்தேர்வு - பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தனித்தேர்வு - பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தனித்தேர்வு – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

புதுச்சேரியில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் பொதுத் தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்கள் அவரவர் படித்த பள்ளிக்கே நேரில் சென்று தனித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனித்தேர்வு:

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு தான் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20ம் தேதி வெளியான நிலையில் இன்று 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் தேர்வெழுத செல்லாத மாணவர்களுக்கு வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தனித்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்நிலையில், புதுச்சேரியில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் தேர்வு எழுதாத மாணவர்கள் தனித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

பொதுத் தேர்வுக்கு செல்லாத மாணவர்கள் மற்றும் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தனித்தேர்வு எழுத விரும்பினால் வரும் ஜூன் 27ஆம் தேதி முதல் ஜூலை 4ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் தாங்கள் படித்த பள்ளிக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எளிமையாக விண்ணப்பிக்க முத்திரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியும், பெண்களுக்கு லாஸ்பேட்டை செல்ல பெருமாள்பேட்டை விவேகானந்த மேல்நிலைப்பள்ளியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் தேர்வு கட்டணமாக ரூபாய் 125 செலுத்த வேண்டும் மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணமாக 50 ரூபாய் என மொத்தம் 175 ரூபாய் சேவை மையங்களில் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் தோல்வி பெற்ற பாடங்களை தேர்வு எழுதும் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூபாய் 50 தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும் மற்றும் இதர கட்டணமாக 35 ரூபாயும், ஆன்லைன் கட்டணமாக ரூ.50 ம்செலுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை முதன்முதலாக எழுத உள்ள தேர்வாளர்கள் தேர்வு கட்டணமாக 150 ரூபாயும், இதர கட்டணமாக 35 ரூபாயும், ஆன்லைன் கட்டணமாக 50 ரூபாயும் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!