தமிழகத்தில் மார்ச் 4 மறைமுகத் தேர்தல் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் மார்ச் 4 மறைமுகத் தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
தமிழகத்தில் மார்ச் 4 மறைமுகத் தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
தமிழகத்தில் மார்ச் 4 மறைமுகத் தேர்தல் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் பதவி பிரமாணம் மற்றும் மாநகராட்சிகளுக்கான மேயர்/துணை மேயர் மற்றும் நகராட்சி/பேரூராட்சிகளுக்கான தலைவர்/துணைத் தலைவர் தேர்தல் நடத்துவது குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில் கடந்த 19ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்க்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மேலும் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 22ம் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் மார்ச் 2 அன்று தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பின் ஆணையாளர் / செயல் அலுவலர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள உள்ளனர்.

தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பிப்பு – தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

இதனை தொடர்ந்து மார்ச் 4ம் தேதி முற்பகல் 09.30 மணிக்கு, மாநகராட்சி மேயர், நகராட்சி/பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல் கூட்டம் தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்களால் கூட்டப்பட்டு, அதே தினமே தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் பெறப்பட உள்ளது. மேலும் போட்டிகள் அதிகம் இருப்பதால் அன்றைய தினமே வாக்குப்பதிவு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Post Office இல் சேமிக்க நினைப்பவர்கள் கவனத்திற்கு – 6.7% வட்டி விகிதம் வரை கிடைக்கும் சேமிப்பு திட்டம்!

மேலும், மாநகராட்சி துணை மேயர், நகராட்சி/பேரூராட்சி துணை தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல் கூட்டம் அன்றைய நாளில் பிற்பகல் 02.30மணிக்கு தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்களால் கூட்டப்பட்டு, அன்றைய தினமே மேற்படி தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் பெறப்பட உள்ளது. மேலும் போட்டிகள் அதிகம் இருப்பதால் அன்றைய தினமே வாக்குப்பதிவு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த வகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மார்ச் 2 அன்று பதவி ஏற்றுக் கொண்ட பின்பு, மார்ச் 4 அன்று நடைபெற உள்ள மறைமுக தேர்தலில் கலந்து கொண்டு தங்கள் ஒத்துழைப்பினை தரும்படி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக் கொள்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!