பட்ஜெட்டில் சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு என்ன? A முதல் Z வரை! முழு விவரம் உள்ளே!!
தற்போது வெளியாக இருக்கும் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல்வேறு எதிர்பார்ப்புகளை சாமானிய மக்கள் கொண்டுள்ளனர். இது தொடர்பாக சந்தைப்படுத்தல் தரவு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான கந்தர் நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. இந்த ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறித்து விரிவாக பார்ப்போம்.
பட்ஜெட்:
நாட்டில் 2023 – 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வருகிற பிப்ரவரி 1ம் தேதி அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் இருக்கும் என சாமானிய மக்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். மேலும் இது தொடர்பாக கந்தர் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
தமிழகத்தில் மின் இணைப்பு எண் – ஆதார் இணைப்பு .. ஜன. 31 கடைசி நாள் – மின் வாரியம் அறிவிப்பு!
Follow our Instagram for more Latest Updates
இந்த ஆய்வின் முடிவில் வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் கொரோனா தொற்றுநோய் குறைந்து வந்தாலும் இன்னும் மறைந்துவிடவில்லை என்பதால் 55% பேர் பட்ஜெட்டில் சுகாதாரப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என கூறுகின்றனர். இதே போன்று அடிப்படை வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயரும் என நுகர்வோர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் இந்த அறிக்கையில், நாட்டில் நான்கில் மூன்று பேர் அதிகரித்து வரும் பணவீக்கம் குறித்து கவலை கொள்கின்றனர் என்றும் இதனை சமாளிக்க அரசு தீவிர நடவடிக்கைகளை பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் நான்கு இந்தியர்களில் ஒருவர், தனது வேலை எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம் என கவலை கொள்கின்றனர். அதனால் வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் இடம்பெறுமா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.