Tokyo Olympics போட்டி – வில்வித்தையில் 2 முறை தங்கம் வென்றவரை வீழ்த்திய இந்தியர்!
ஜப்பானில் நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், வில்வித்தை பிரிவில் 2 முறை தங்கம் வென்ற தென்கொரியாவை சேர்ந்த ஓ ஜின் என்பவரை, இந்திய வில்வித்தை வீரர் அதானு தாஸ் வீழ்த்தி அசத்தி உள்ளார்.
ஒலிம்பிக் போட்டி:
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தடைபட்டதான டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் நடத்தப்படும் பலவிதமான போட்டிகளில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இந்தியாவிற்கான முதல் வெள்ளி பதக்கத்தை மீராபாய் சானு என்ற பளுதூக்குதல் வீராங்கனை பெற்று தந்துள்ளார்.
தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகை நீட்டிப்பு – அரசு நடவடிக்கை!
அந்த வகையில் தற்போது வரை நடந்து முடிந்துள்ள ஒலிம்பிக் வில்வித்தை போட்டிகளில், இந்தியாவை சேர்ந்த தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ், அதானு தாஸ், தருண் தீப் ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் வில்வித்தை தனிநபர் பிரிவில் பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய் இருவரும் தோல்வியை தழுவியுள்ள நிலையில், வீராங்கனை தீபிகா குமாரி மட்டும் கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார். மேலும் குத்துச்சண்டை போட்டியில் 91 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவை சேர்ந்த சதீஷ் குமார் என்பவர், ஜமைக்காவை சேர்ந்த ரிகார்டோ பிரவுன் என்பவரை 4 – 1 கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
இதனிடையே இன்று (ஜூலை 29) நடைபெற்று வரும் போட்டியில் கலந்து கொண்ட இந்தியாவை சேர்ந்த அதானு தாஸ் என்பவர், தென் கொரியாவை சேர்ந்த 2 முறை ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவரும், உலகின் 3 ஆம் நிலை வீரருமான ஓ ஜின் ஹைக் என்பவரை தோற்கடித்துள்ளார். ஸ்வாரஸ்யமாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் 6 – 5 செட் கணக்கில் அதானு தாஸ் வெற்றி பெற்றுள்ளார். இதன் அடிப்படையில் வில்வித்தை பிரிவில் இந்திய வீரர் அதானு தாஸ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.