காமன்வெல்த் போட்டி 2022 – கானாவை வீழ்த்திய இந்திய மகளிர் ஹாக்கி அணி!
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நேற்று முதல் ஆகஸ்ட் 8-ந் தேதி வரை நடக்கிறது. 1930-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று குரூப் ஏ பிரிவில் இந்தியா, கானா அணிகள் மோதின. இதில் இந்தியா 5- 0 என்ற கோல் கணக்கில் கானா அணியை வீழ்த்தியது.
காமன்வெல்த் போட்டி:
இங்கிலாந்தில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நேற்று தொடங்கியது. மேலும் உலகின் 3வது பெரிய விளையாட்டு திருவிழாவான காமன்வெல்த் போட்டி பர்மிங்காம் நகரில் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா அணிவகுப்பில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் தங்கள் நாட்டு கொடியை ஏந்திச் சென்றனர். மேலும் இந்தியா சார்பில் பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் தேசிய கொடியை ஏந்தி அணிவகுப்புக்கு தலைமை தாங்கினர்.
Exams Daily Mobile App Download
அலெக்சாண்டர் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டிக்கான தொடக்கவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில், கண்ணை கவரும் வானவேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டது. குறிப்பாக 10 மீ உயரத்திற்கு வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட காளை உருவத்தை பெண்கள் சங்கிலி மூலம் இழுத்துச் சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த விளையாட்டு திருவிழாவில் மொத்தம் 72 நாடுகளில் இருந்து 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
வருவாய் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள
அதில், காமன்வெல்த் இந்தியாவிலிருந்து 215 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் போட்டியை, நேற்று இளவரசர் சார்லஸ் தொடங்கி வைத்தார். இந்த தொடரில் புதிதாக, இருபது ஓவருக்கான மகளிர் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. முதல் நாளில் நடந்த மகளிருக்கான ஹாக்கி போட்டியில் இந்தியா, கானா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் குர்ஜித் கெளர் (3,39), நேகா (28), சங்கீதா குமாரி (36), சலிமா டேடே (56) ஆகியோர் கோல்களை அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.