Tokyo Olympics : இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை 8:30 மணியளவில் துவங்கிய பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, இந்திய அணி முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஒலிம்பிக் போட்டி
இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியில் தற்பொழுது இந்திய அணி பதக்கங்களை பெற்று முன்னேறி வருகிறது. அதாவது 2021 ஆம் ஆண்டுக்கான போட்டி துவங்கியதில் இருந்து, ஒரேயொரு வெள்ளிப் பதக்கத்தை பெற்றிருந்த இந்திய அணி தற்பொழுது வெற்றி பாதையை நோக்கி முன்னேறிக்கொண்டு வருகிறது. நேற்று (ஆகஸ்ட் 1) நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவுக்கான இரண்டாவது பதக்கத்தை பெற்று கொடுத்துள்ளார் பி.வி.சிந்து. இதை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 2) நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இன்று முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அனுமதி!
இந்திய மகளிர் ஹாக்கி அணி 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்தியாவை சேர்ந்த குர்ஜித் கவுரின் ஒரு பெனால்டி கார்னர் கோல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற திருப்பு முனையாக அமைந்துள்ளது. அதன் அடிப்படையில் இந்திய மகளிர் ஹாக்கி அணி முதன்முறையாக ஒலிம்பிக்கின் நாக் அவுட் நிலைக்குள் நுழைந்து வரலாறு படைத்துள்ளது. இந்திய ஹாக்கி அணி வீராங்கனைகள் பூல் A இல் இரண்டு வெற்றி மற்றும் மூன்று தோல்விகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
முன்னதாக நேற்று (ஆகஸ்ட் 1) நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இந்திய ஆண்கள் ஹாக்கி அணி சுமார் 41 வருட இடைவெளிக்குப் பிறகு அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. காலிறுதியில் கிரேட் பிரிட்டனுடன் மோதிய இந்திய ஹாக்கி அணி வீரர்கள் அந்த அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. இந்தியாவை சேர்ந்த ஃபார்வர்ட்ஸ் தில்பிரீத் சிங், குர்ஜந்த் சிங் மற்றும் ஹர்திக் சிங் ஆகியோர் கோல் அடித்து இந்த வெற்றிப்பாதைக்கு இந்திய அணியை அழைத்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் நாளை (ஆகஸ்ட் 3) நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான பெல்ஜியத்தை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது.