இந்திய மாணவர்களுக்கு இஸ்ரேல் உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!!
இந்திய மாணவர்கள், இஸ்ரேலில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் குறுகிய கால கல்வி பெற விரும்பினால் இஸ்ரேல் அரசாங்கம் கல்வி உதவித்தொகை திட்டத்தை வழங்குகிறது.
இஸ்ரேல் கல்வி நிறுவனங்கள்:
இந்திய மாணவர்களுக்கு உயர்கல்வி பெற அரசு தரப்பில் பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் குறுகிய கால கல்வி பெற விருப்பம் உள்ள மாணவர்களுக்கு இஸ்ரேல் அரசாங்கம் மூலமாக கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த உதவித்தொகை 8 மாத கால ஆராய்ச்சி மற்றும் 3.5 வார கால கோடை கால படிப்புகள் என இரண்டு பிரிவுகளில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை கம்பேரிட்டிவி ஸ்டடீ ஆப் ரிலிஜியன்ஸ், மிடில் ஈஸ்ட் ஸ்டடீஸ், ஹிப்ரு லேங்குவேஜ் அண்ட் லிட்ரெச்சர், ஹிஸ்ட்ரி ஆப் ஜுவிஷ் பீப்புல், அக்ரிகல்ச்சர், பயோலஜி, பயோடெக்னாலஜி, எக்னாமிக்ஸ், பிசினஸ் மேனேஜ்மெண்ட், மாஸ் கம்யூனிகேஷன், என்விரான்மெண்ட் ஸ்டடீஸ் மற்றும் கெமிஸ்ட்ரி போன்ற படிப்புகளுக்கு வழங்கப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் – 2ம் கட்ட பயிற்சி வகுப்புகள் தொடக்கம்!!
இந்த உதவிதொகை மூலமாக கல்வி பெற விருப்பமுள்ள மாணவர்கள் இஸ்ரேல் கல்வி நிறுவனங்களிடம் இருந்து அனுமதி கடிதம் பெற வேண்டும். இந்த உதவித்தொகை பெற கட்டாயம் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். மேலும் இஸ்ரேல் அரசு வழங்கும் உதவித்தொகை திட்டத்தின் மூலம் எந்த உதவித்தொகையும் பெற்றிருக்க கூடாது.
தமிழக விவசாயிகளுக்கு 24 மணிநேர மும்முனை மின்சாரம் – முதல்வர் அறிவிப்பு!!
இந்த உதவித்தொகை பெற அதிகபட்ச வயது 35 ஆகும். இஸ்ரேல் அரசு வழங்கும் 8 மாத படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தில் பாதியை இஸ்ரேல் அரசாங்கமே வழங்குகிறது. இதில் அதிகபட்சமாக 12 ஆயிரம் அமெரிக்க டாலர் வரையிலான உதவித்தொகை மற்றும் மருத்துவ காப்பீடு 8 மாதங்கள் வரையில் மாத உதவித்தொகையாக மொத்தம் 850 அமெரிக்க டாலர் போன்றவை வழங்கப்படும். இந்த திட்டத்தில் சேர விண்ணப்பிக்க http://proposal.sakshat.ac.in/scholarship/ என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்யலாம்.