அதிரடியாக உயர்ந்துள்ள இந்திய பங்குச்சந்தைகள் – மகிழ்ச்சியில் வணிகர்கள்!
இந்திய பங்கு சந்தையானது தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று காலை நேர நிலவரப்படி சென்செக்ஸ் புள்ளிகள் உயர தொடங்கியுள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பங்கு சந்தை:
இந்தியாவில் பங்கு வர்த்தகம் இந்திய தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை ஆகிய இரு பெரும் பங்குச்சந்தைகளில் நடைபெறுகிறது. இதைத்தவிர வேறு சில முக்கிய பங்குசந்தைகளும் செயல்பட்டு வருகின்றன. இங்கு தான் வணிகத்தின் முக்கிய ஏற்ற இறக்கங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
கடந்த சில மாதங்களாக நடந்து வரும் ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்கு சந்தைகள் சரிவை சந்தித்து வந்தது. இதனால் வணிகர்கள் சற்று அதிர்ச்சியில் இருந்து வந்தனர். ஆனால் வணிக நிபுணர்கள் நாட்டில் இனி பங்கு சந்தையில் உயர்வு இருக்கும் என்று கணித்து வந்தனர்.
தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில் – பயணிகள் அதிருப்தி! தெற்கு ரயில்வே விளக்கம்!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், இன்று காலை 10 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 194 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இதனால் 57,341 புள்ளிகள் என வர்த்தகமாகிறது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 60 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இதனால், 17,044 புள்ளிகள் என வர்த்தகமாகிறது. பங்கு சந்தை உயர்வை சந்தித்து உள்ளதால் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்