அஞ்சல்துறை அக்கவுண்டண்ட் தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு – மத்திய அமைச்சருக்கு கடிதம்!!
இந்தியாவின் மிகப்பெரிய துறையாக உள்ள அஞ்சல் துறையில் அக்கவுண்டண்ட் பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் அக்கவுண்டண்ட் தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இதுகுறித்து திமுக எம்பி செந்தில் குமார் மத்திய தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அஞ்சல்துறை அக்கவுண்டண்ட் தேர்வு:
உலகில் உள்ள பெரிய துறைகளில் 1,54,000 அலுவலகங்களை கொண்ட இந்திய அஞ்சல்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பலர் இணைய சேவையை பயன்படுத்தி அஞ்சல்துறையை மறந்து வரும் நிலையிலும் மிக முக்கிய ஆவணங்கள் மற்றும் வங்கி தகவல்கள் அஞ்சல் மூலமாகவே அனுப்பப்படுகின்றன.
போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி – மாவட்ட வேலைவாய்ப்பு துறை அறிவிப்பு!!
இத்தகைய சிறப்பு வாய்ந்த அஞ்சல் துறையில் உள்ள அக்கவுண்டண்ட் வேலைக்கான தேர்வுகள் வருகிற பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் மட்டும் இடம் பெற்று தமிழ் மொழி இடம் பெறவில்லை. இது குறித்து ஏற்கனவே மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில் அஞ்சல்துறை தேர்வுகள் கட்டாயம் தமிழில் நடைபெறும் என வாக்குறுதி அளித்தார்.
தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 80% பெற்றோர்கள் கோரிக்கை – தயாராகும் கல்வித்துறை!!
இதனை சுட்டிக்காட்டி திமுக எம்பி செந்தில்குமார் மத்திய தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறிய வாக்குறுதியை சுட்டிக்காட்டி கடந்த ஆண்டு இந்த தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அடுத்த ஆண்டு தமிழில் நடத்தப்படும் என நாடாளுமன்றத்தில் அமைச்சர் உறுதி அளித்ததாக கூறியுள்ளார். இந்த அறிவிப்பை மத்திய அரசும் ஏற்றுக்கொண்ட நிலையில் தற்போது தமிழ் மொழி புறக்கணிப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்