Post Office இல் குழந்தைகளுக்காக சேமிக்க நினைக்கும் பெற்றோர் கவனத்திற்கு – சூப்பரான திட்டம்!
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதில் மாத வருமானத் திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் மற்றும் முதிர்வு தொகை உள்ளிட்ட பலன்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
மாத வருமானத் திட்டம்
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு ஏராளமான வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். ஏனெனில் இதில் முதலீடு செய்வதால் வங்கிகளை காட்டிலும் அதிகமான வட்டி தொகைகளை பெற முடிகிறது. மேலும் கொரோனா போன்ற பேரிடர் காலத்திலும் இதில் கிடைக்கும் வட்டி தொகை மூலமாக நிலையான வருவாய் பெற முடியும். மேலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் அஞ்சல் துறை செயல்படுவதால் பணத்திற்கு முழு பாதுகாப்பும் கிடைக்கிறது.
இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் & தளர்வுகள் அமலில் இருக்கும் மாநிலங்கள் – முழு பட்டியல் இதோ!
தற்போது அஞ்சல் அலுவலகத்தில் உள்ள மாத வருமானத் திட்டம் பற்றி விரிவாக பார்க்கலாம். இந்த திட்டத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கூட சேமிப்பு கணக்கை தொடங்க முடியும். அத்துடன் இதில் ஒவ்வொரு மாதத்திற்கும் வட்டி தொகை வழங்கப்படுகிறது. இந்த வட்டி தொகையை பயன்படுத்தி குழந்தைகளின் எதிர்கால செலவினத்தை எதிர்கொள்ள முடியும். தற்போது இந்த திட்டத்தில் 6.6% வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தில் 10 வயதுக்கு குறைவான குழந்தைகள் கூட கணக்கை தொடங்க முடியும்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட அரசாணை வெளியீடு!
ஆனால் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயரில் கணக்கை தொடங்க வேண்டும். இந்த திட்டத்தில் 10 வயதுடைய குழந்தை ரூ.2 லட்ச தொகையை அவரது பெயரில் முதலீடு செய்தால் மாதம் ரூ.1100 மட்டும் வட்டி தொகை கிடைக்கும். அத்துடன் 5 ஆண்டுகள் முடிவில் 66000 வட்டி தொகை கிடைக்கிறது. அதே போல் ரூ.3.50 லட்ச தொகையை முதலீடு செய்தால் மாதம் ரூ.1,925 வட்டித் தொகையும் ரூ.4.5 லட்சம் முதலீடு செய்தால் ரூ.2,475 வரை வட்டி தொகை கிடைக்கிறது. அதனால் மாத வருமானத் திட்டம் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.