இந்திய பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் சுய தொழில் புரிய விரும்புவோர்க்கு பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சுயதொழில் கடனுதவி:
தமிழகத்தில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் வங்கிகளின் மூலமாக உற்பத்தி பிரிவிற்கு ரூ.25 லட்சம் மற்றும் சேவைப் பிரிவில் ரூ.10 லட்சம் வரை கடனுதவி அளிக்கப்படுகிறது. சுய தொழில் செய்பவர்களை ஊக்குவித்து நாட்டின் தொழில் வளர்ச்சியை அதிகப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் இளைஞர்கள் தொடங்க ஆர்வம் காட்டுகின்றனர். அரசு வேலைகளுக்கு காலம் தாழ்த்தாமல் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் கீழ் கடன் பெற்று தொழிலை தொடங்குகின்றனர்.
ஜூலை 18 முதல் 24 வரை முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
இத்திட்டத்தின் மூலம் தொழில் செய்யும் ஊராட்சி மற்றும் தேர்ந்தெடுக்கும் தொழில் பிரிவை பொறுத்து 15 முதல் 35 சதவீதம் வரை தொழில்முனைவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது. 5 லட்சத்திற்கு மேற்பட்ட உற்பத்தி சார்ந்த திட்டங்களுக்கு விண்ணப்பிக்க 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. தற்போது சுயதொழில் புரிய விரும்புவோர்க்கு பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
18 வயது பூர்த்தி அடைந்த எவரும் இத்திட்டத்தின் கீழ் பயன் அடைய விண்ணப்பிக்கலாம். மேலும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரரின் புகைப்படம், ஆதார் அட்டை, சிறப்பு பிரிவினர் என்றால் அதற்கான சான்றுகள் போன்றவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் கூடுதல் தகவல்களை அறிய கன்னியாகுமரி மாவட்ட மையத்தை 0462-260008 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அறியலாம் எனவும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.