தங்கப் பதக்கம் வென்றால் பயிற்சியாளருக்கு ரூ.12 லட்சம் பரிசு – இந்திய ஒலிம்பிக் சங்கம்!
இந்தியாவில் தங்க பதக்கம் வெல்லும் வீரர்கள் பயிற்சியாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பரிசு தொகை வழங்கப்படும் என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயலாளர் ராஜீவ் மேத்தா தெரிவித்துள்ளார்.
பயிற்சியாளர்களுக்கு பரிசு தொகை :
இந்தியா விளையாட்டு துறையில் சிறந்து விளங்குகிறது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களின் விளையாட்டு திறமைகள் கண்டறிந்து தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட மாநில அளவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு விளையாட்டு வீரர்கள் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல ஊக்குவிக்கப்படுகின்றனர். இவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பவர்கள் வீரர்களின் பயிற்சியாளர்கள் ஆவர்கள். அவர்கள் விளையாட்டு வீரர்களின் திறமைகளை கண்டறிந்து தொடர்ந்து வழிகாட்டி வருகின்றனர்.
அரசு தொழிற்பயிற்சி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
ஒவ்வொரு விளையாட்டு வீரர்களின் வெற்றியிலும் பயிற்சியாளர்களின் பங்கு இன்றியமையாததாகும். விளையாட்டு வீரர்களின் பயிற்சியாளர்கள் தொடர்ந்து அவர்களை ஊக்குவிக்கின்றனர். மேலும் விளையாட்டு பயிற்சியின் போது தேவையான நுணுக்கங்களை கற்று தருகின்றனர். ஒவ்வொரு முறை பயிற்சியின் போதும் அவர்களின் வளர்ச்சியை அறிந்து அதற்கேற்றவாறு பயிற்சி முறைகளை மாற்றுகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் இன்று இரவு ஊரடங்கு அமல் – வன்முறை எதிரொலி!
தற்போது நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மீரா பாய் தங்க பதக்கம் வென்றுள்ளார். இந்த நிலையில் அவரின் பயிற்சியாளர் விஜய் சர்மாவிற்கு ஊக்கத்தொகை பரிசாக ரூபாய் 12லட்சம் வழங்கப்படும் என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயலாளர் ராஜீவ் மேத்தா அறிவித்துள்ளார். மேலும் வெள்ளி பதக்கம் பெற்ற வீரரின் பயிற்சியாளர்களுக்கு 10 லட்சமும், வெண்கல பதக்கம் பெறும் வீரர்களின் பயிற்சியாளருக்கு 7.5 லட்சமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.