சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு – இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு!!

1
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு - இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு!!
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு - இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு!!
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு – இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு!!

இந்தியன் ஆயில் நிறுவனம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 10 ரூபாய் குறைத்து உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த விலை குறைப்பானது நாளை முதல் (ஏப்ரல் 1) அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.

சிலிண்டர் விலை குறைப்பு:

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதனால் விலைவாசி தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு இரண்டு முறை காஸ் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 100 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது.

ஏப்ரல் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் LPG சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது இந்தியன் ஆயில் நிறுவனம் விலை குறைப்பினை அறிவித்துள்ளது. அதன்படி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த விலை குறைவு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 819 ரூபாயில் இருந்து 809 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. தங்கத்தை விலை உயர்த்தும் போது 1,000&2,000 உயர்த்தப்பட்டு ஆனால் குறைக்கும் போது 20,30,100 ருபாய் அதுப்போல இப்பொழுது சிலிண்டர் விலை குறைக்கப்படுகிறது இது சரியா?????…….அரசியல்வாதிகள் கருப்பு பணத்தை வெளியே எடுத்து வந்தால் மக்கள் அப்போதே நிம்மதியடைவார்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!