இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் பொறியியல் படித்தவர்க்கு காத்திருக்கும் வேலை- விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

0

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் பொறியியல் படித்தவர்க்கு காத்திருக்கும் வேலை- விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Engineers / Officers & Graduate Apprentice engineers பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தில் Engineers / Officers & Graduate Apprentice engineers பணிகளுக்கு என்று மொத்தமாக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E / B.Tech / M.E / M.Tech டிகிரி முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் GATE 2022 தேர்வுகளில் Chemical Engineering / Civil Engineering / Computer Sc & Engineering / Electrical Engineering / Instrumentation Engineering / Mechanical Engineering / Metallurgical Engineering பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • General / EWS பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 26 வயது அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு அளிக்கப்படும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.
  • மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் மாதம் குறைந்தது ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,60,000/- வரை ஊதிய தொகை பெறுவார்கள். மேலும் இத்துடன் வழங்கப்பட உள்ள கூடுதல் தொகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் GATE 2022 Mark, Group Discussion(GD), Group Task (GT), Personal Interview (PI), Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 22.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!