இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் பொறியியல் படித்தவர்க்கு காத்திருக்கும் வேலை- விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Engineers / Officers & Graduate Apprentice engineers பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தில் Engineers / Officers & Graduate Apprentice engineers பணிகளுக்கு என்று மொத்தமாக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E / B.Tech / M.E / M.Tech டிகிரி முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் GATE 2022 தேர்வுகளில் Chemical Engineering / Civil Engineering / Computer Sc & Engineering / Electrical Engineering / Instrumentation Engineering / Mechanical Engineering / Metallurgical Engineering பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- General / EWS பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 26 வயது அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு அளிக்கப்படும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.
- மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் மாதம் குறைந்தது ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,60,000/- வரை ஊதிய தொகை பெறுவார்கள். மேலும் இத்துடன் வழங்கப்பட உள்ள கூடுதல் தொகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
- விண்ணப்பதாரர்கள் GATE 2022 Mark, Group Discussion(GD), Group Task (GT), Personal Interview (PI), Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 22.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.