இந்திய கடற்படையில் 300 காலிப்பணியிடங்கள் – 10வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
இந்தியக் கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரபூர்வத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் Sailor பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே இப்பணி குறித்த முழு தகவல்களையும் அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Indian Navy |
பணியின் பெயர் | Sailor |
பணியிடங்கள் | 300 |
கடைசி தேதி | 29.10.2021 – 02.11.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
இந்தியக் கடற்படை காலிப்பணியிடங்கள் :
இந்தியக் கடற்படையில் Sailor பணிகளுக்கு என 300 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பிப்பதாரர்கள் 01 ஏப்ரல் 2002 அன்று முதல்31 மார்ச் 2005 அன்று வரை உள்ள காலகட்டத்திற்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
சிறந்த TNPSC Coaching Centre – Join Now
Indian Navy கல்வித்தகுதி :
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு/ கல்வி அமைச்சகத்தின் அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதாகும்.
Indian Navy ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.14,600/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Written Examination/ Physical Fitness Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 29.10.2021 அன்று முதல் 02.11.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
Super nice job