இந்திய கடலோர காவல் படையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை – 322 காலிப்பணியிடங்கள்..!
இந்திய கடலோர காவல்படையில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Navik மற்றும் Yantrik பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Navik மற்றும் Yantrik பணிக்கென 322 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- Navik and Yantrik பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 எனவும் அதிகபட்சம் 22 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 22 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு/ஆவண சரிபார்ப்பு/மருத்துவ தகுதி/ உடல் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.01.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.