வங்கக்கடலில் உருவாகும் ‘யாஸ்’ புயல் – வானிலை மையம் எச்சரிக்கை!!
அரபிக்கடல் பகுதிகளில் உருவான டவ்தே புயல் குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தி கரையை கடந்துள்ளது. இந்த நிலையில் வங்கக்கடலில் ஒரு புதிய புயல் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
யாஸ் புயல்:
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் அது அதி தீவிர புயலாக வலுப்பெற்றது. இந்த ‘டவ்தே’ புயல் கேரளா, மஹாராஷ்டிரா எல்லை வழியாக சென்று குஜராத் மாநிலத்தில் கரையை கடந்தது. இருந்தாலும் இந்த புயல் காரணமாக இந்த 3 மாநிலங்களிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டது. இந்த நிலையில் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு புதிய புயல் உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை – மாநில முதல்வர் அறிவிப்பு!!
இது குறித்து வானிலை மையம் அளித்துள்ள அறிக்கையில், ‘இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே தென்மேற்கு பகுதியில் காற்று வீச துவங்கியுள்ளதால், தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், தென்மேற்கு பருவமழை துவங்கும். மேலும் வங்கக்கடல் மேற்பரப்பு பகுதியில் வெப்பநிலை சற்று சாதகமாக உள்ளதால் வடக்கு அந்தமான் மற்றும் கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நாளை (மே 22) குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகலாம்.
இந்த குறைந்த காற்றழுத்தம் அடுத்த 72 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறக்கூடும். இந்த புயலுக்கு ‘யாஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது வடமேற்கு பகுதியை நோக்கி நகர்ந்து, வரும் 26 ஆம் தேதி மாலை அல்லது 27 ஆம் தேதி அதிகாலையில் ஒடிசா, மேற்குவங்க மாநிலத்தின் இடையே கரையைக் கடக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ள மீனவர்களுக்கு செயற்கைகோள் தொலைபேசி, உள்ளிட்ட தொலைத்தொடர்பு கருவிகள் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து அந்த மீனவர்கள் வரும் 23ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்பும் நடவடிக்கைகளை தமிழக மீன்வளத்துறை தற்போது மேற்கொண்டுள்ளது. அதே போல இந்த செயல்பாடுகளை கண்காணிக்க 24 மணி நேரமும் சிறப்பு கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. பொது மக்கள் பேரிடர் தொடர்பான தகவல்களை தெரிவிக்க, மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் 1070 மற்றும் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையம் 1077 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
முன்னதாக தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.