ஏப்ரல் 20 ஆம் தேதி வரை கனமழை கொட்டித் தீர்க்கும் – இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

0
ஏப்ரல் 20 ஆம் தேதி வரை கனமழை கொட்டித் தீர்க்கும் - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
ஏப்ரல் 20 ஆம் தேதி வரை கனமழை கொட்டித் தீர்க்கும் - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
ஏப்ரல் 20 ஆம் தேதி வரை கனமழை கொட்டித் தீர்க்கும் – இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

கேரள மாநிலத்தில் வருகின்ற 20 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் கொடுத்து உள்ளது. மாநிலம் முழுவதும் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மாநில அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் சமீப நாட்களாக கோடை மழை பெய்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில் இந்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகே இருக்கும் பகுதிகளில் பலத்த மழை கொட்டுகிறது. இதனால் கேரளாவில் மலையோர மாவட்டங்களில் உள்ள பொதுமக்களுக்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேரிடர் மீட்பு படையினர் சார்பில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஷாக் அறிவிப்பு – IPL தொடரில் இருந்து விலகிய தீபக் சஹார்!

இந்த நிலையில் தற்போது இந்தியா வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய தகவலை தெரிவித்து உள்ளது. அது என்னவென்றால், கேரளாவில் தற்போது பெய்து வரும் கோடை மழை தொடர்ந்து பெய்யும். 20ஆம் தேதி வரை மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதனை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும். அங்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ரூ.9 லட்ச ஊதியத்தில் மத்திய அரசின் ஆதார் துறையில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

இது மட்டுமல்லாமல் அங்கு வரவுள்ள மழையின் காரணமாக கடலில் சூறைக்காற்று வீசும் என்றும், மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் கூறியுள்ளனர். இதனால் கடலுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும் கடல் கொந்தளிப்பாகவும், அலைகள் சீற்றத்துடனும் காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. கேரளாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து இருப்பதால் மாநிலம் முழுவதும் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் மலையோர மாவட்டங்களில் பொது மக்கள் இரவு நேர பயணத்தை தவிர்க்குமாறு கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!