இந்திய ஐடி ஊழியர்களின் பணிக்கு ஆபத்து – வெளியான திடுக்கிடும் தகவல்!
உலக அளவில் நிலவி வரும் பொருளாதார பிரச்சனைக்கு மத்தியில் தற்போது இந்திய ஐடி ஊழியர்களுக்கு மிக பெரிய ஆபத்து வந்துள்ளது. அதன்படி ஐடி சேவை வழங்குநரான EPAM சிஸ்டம்ஸ் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஐடி ஊழியர்கள்:
உலக அளவில் தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் உலக வங்கிகளின் வட்டி விகிதமும் அதிகரித்து வருகிறது. அதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் செலவினங்களை குறைக்க திட்டமிட்டு வருகிறது. இதன் தாக்கத்தை அனைத்து வணிக மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களும் சந்தித்து வருகிறது. அந்த வகையில் ஐடி துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் முன்னணி ஐடி நிறுவனங்கள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
எப்போதும் மிக பெரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் ஐடி துறை கடந்த சில மாதங்களாக பின்னடைவை சந்தித்து வருகிறது. இதனால் புதிய பணி நியமனங்கள் செய்யப்படாமல் இருந்து வருகிறது. மேலும் தற்போது பணியில் உள்ள ஊழியர்களும் தங்களது பணி தொடருமா? என்ற அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் ஐடி சேவை வழங்குநரான EPAM சிஸ்டம்ஸ் சுமார் 100 இந்திய ஊழியர்களை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இனி தடாலடியாக உயர உள்ள பால் & இறைச்சி விலை – அதிர்ச்சியில் பொதுமக்கள்!
Exams Daily Mobile App Download
இந்த ராஜினாமாவை தொடர்ந்து பணியில் இன்டர்வியூ முடிந்து தேர்வு செய்யப்பட்டு விரைவில் பணியமர்த்தப்படவிருந்த பலரின் ஆஃபர் லெட்டர்களையும் நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. தங்களின் வேலையும் பறிபோய் விடுமோ என ஐடி ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே ஐடி துறையில் மூன்லைட்டிங் முறை சர்ச்சை சமீபத்தில் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்