இந்திய IT நிறுவன ஊழியர்கள் பணி நீக்கம்? கவனம் பெறும் தொழிலாளர் நீதிமன்றத்தின் முடிவு!
இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் (IT) பணிபுரியும் ஊழியர்களை சட்ட விரோதமான முறையில் பணிநீக்கம் செய்வது குறித்த வழக்குக்கு கிடைத்த தீர்ப்பு ஒரு முக்கிய திருப்பு முனையாக பார்க்கப்படுகிறது.
பணி நீக்கம்
கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அலுவலகத்தை விட்டு வெளியேற்றப்பட்ட ஒரு ஊழியரை மீண்டும் பணியில் சேர்க்குமாறு சென்னை தொழிலாளர் நீதிமன்றம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தை கேட்டுக்கொண்டதற்கு பிறகு, நாட்டில் சட்ட விரோதமான பணிநீக்கங்களில் கவனம் செலுத்தப்படுகிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கு, எதிர்காலத்தில் பெருமளவிலான பணி நீக்கங்கள் அல்லது சட்டத்திற்கு புறம்பாக ஊழியர்களின் பணிநீக்கங்கள் ஏற்படும் போதெல்லாம் ஒரு குறிப்பு புள்ளியாக பயன்படுத்தப்படலாம் என்றும் கருத்துக்கள் எழுந்துள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நடவடிக்கை குறித்து நிஷித் தேசாய் அசோசியேட்ஸின் மனித வள சட்டங்களின் தலைவர் விக்ரம் ஷ்ராஃப் கூறுகையில், ‘இது போல ஒரே மாதிரியான பல தீர்ப்புகளை நாம் சந்திப்பதால் தொழிலாளர்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இந்த உத்தரவு இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் IT நிறுவனங்களின் வேலை நீக்கம் தொழில்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் PM கிசான் திட்ட விவசாயிகளுக்கு ரூ.2000 – eKYC அப்டேட் செய்ய காலக்கெடு நீட்டிப்பு!
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், சென்னையில் உள்ள முதன்மை தொழிலாளர் நீதிமன்றம், ஏழு வருட விசாரணைக்கு பிறகு திருமலைச் செல்வன் என்பவரை ஊதியம் மற்றும் பிற அனைத்து உதவியாளர் சலுகைகளுடன் மீண்டும் பணியில் அமர்த்துமாறு TCS நிறுவனத்தை கேட்டுக்கொண்டது. இப்போது தொழிலாளர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, IT நிறுவனங்கள் தொழில் தகராறுகள் சட்டத்தில் இருந்து ஊழியர்களை தானாக விலக்கு அளிக்க முடியாது என்ற தெளிவான தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.