இந்திய கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளில் வளாகங்கள் அமைக்காலம் – மத்திய அரசு அனுமதி!!

1
இந்திய கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளில் வளாகங்கள் அமைக்காலம் - மத்திய அரசு அனுமதி!!
இந்திய கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளில் வளாகங்கள் அமைக்காலம் - மத்திய அரசு அனுமதி!!
இந்திய கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளில் வளாகங்கள் அமைக்காலம் – மத்திய அரசு அனுமதி!!

இந்தியாவில் உள்ள உயர் சிறப்பு அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்கள், வெளிநாடுகளில் தங்களது வளாகங்களை தொடங்க புதிய கல்வி கொள்கை திட்டத்தின் கீழ் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய கல்வி நிறுவனங்கள்:

மத்திய அரசு 2017-ஆம் ஆண்டு ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் கீழ் உள்ள கல்வி நிறுவன மேம்பாட்டுக்கு ரூ.1,000 கோடி நிதியுதவி மற்றும் பல்வேறு சலுகைகள் தரப்படும். இந்தியாவில் ஏற்கனவே ஐஐடி டெல்லி, ஐஐடி பாம்பே, ஐஐஎஸ்சி பெங்களூரு ஆகிய மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம், ஐஐடி சென்னை, ஐஐடி காரக்பூர் ஆகிய கல்வி நிறுவனங்களுக்கும் உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

பள்ளிகளை திறந்தாலும் மாணவர்களை அனுப்ப தயாராக இல்லை – பெற்றோர்கள் கருத்து!!

இந்நிலையில் தற்போது புதிய கல்வி கொள்கை திட்டத்தின் கீழ், உயர் சிறப்பு கல்வி அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளில் தங்களது நிறுவனங்களை திறந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு,

  1. இந்திய கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளில் வளாகங்களை அமைத்து கொள்ளலாம். அதே போல் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கல்வி வளாகங்களை அமைத்து கொள்ளலாம்.
  2. இந்திய கல்வி நிறுவனங்கள் அதிகபட்சமாக 5 ஆண்டுகளில் 3 முறை வளாகங்கள் அமைக்கலாம். ஆனால் ஒரு கல்வியாண்டில் ஒரு முறை மட்டுமே அமைக்க வேண்டும்.
  3. கல்வி, ஆசிரியர்கள் நியமனம், மாணவர் சேர்க்கை, ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, நிதி மற்றும் நிர்வாகம் ஆகியவை குறித்த 10 ஆண்டுகால திட்டமிடல், 5 ஆண்டுகால செயல்படுத்தும் திட்டம் ஆகியவற்றை மத்தியக் கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
  4. வெளிநாடுகளில் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் நிரந்தரமாக வளாகங்களை நியமிக்க வேண்டும்.
  5. வெளிநாடுகளில் வளாகங்களை உருவாகும் முன் உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் தடையில்லா சான்றிதழைப் பெற வேண்டும். மேலும் மத்திய அமைச்சகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!