இந்தியாவில் வெளிநாட்டினருக்கு கொரோனா தடுப்பூசி? – மத்திய அரசின் அதிரடி முடிவு!
இந்தியாவில் உள்ள மற்ற நாடுகளை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் திடீர் முடிவு எடுத்துள்ளது.
மத்திய அரசு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கப்பட்டது. முன்னதாக தடுப்பூசி உற்பத்தி குறைவாக இருந்ததால் முன்கள பணியாளர்களுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் செலுத்தப்பட்டது. அதன்பின்னர், ஒவ்வொரு கட்டமாக முன்னுரிமை அடிப்படை அறிவிக்கப்பட்டது. மே 1ம் தேதி முதல் நாட்டில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மதுரையில் கூடுதல் கட்டுப்பாடுகள், தடை விதிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
முன்னதாக கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக பல புரளிகள் இருந்து வந்தது. இதனால் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு அதிக அளவில் ஆர்வமில்லாமல் இருந்தனர். தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களுக்கு அதிக அளவில் விழுப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவால் அதிக அளவிலான மக்கள் தற்போது தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். இதுவரையிலும், இந்தியாவில் வசித்து வரும் வெளிநாட்டினருக்கு வேக்சின் போட அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. தற்போது மத்திய சுகாதாரத்துறை இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு அவர்களின் பாஸ்போர்ட்டை ஆவணமாகப் பயன்படுத்தி கோவின் தளத்தில் பதிவு செய்து கொள்வதன் மூலம் இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், நாட்டில் வசிக்கும் அனைவர்க்கும் தடுப்பூசி போடுவது முக்கியமானதாகவும், அதிக மக்கள் நெருக்கடியினால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தடுப்பூசி செலுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.