இந்தியாவில் கொரோனா ஊரடங்கு – மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் அனைத்து மாநிலங்களும் கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் தொடர்ந்து சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் நீக்கம்:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தொற்றால் பாதிப்பு எண்ணிக்கை தினசரி உச்சம் தொட்டு வந்தது. இதனை கட்டுப்படுத்தவும் மக்களை தொற்றிலிருந்து பாதுகாக்கவும் அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டது. அந்த வகையில் முதல் கட்டமாக சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலுக்கிணங்க ஊரடங்கு மற்றும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த ஊரடங்கால் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் மக்களும் தங்களின் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர்.
தமிழகத்தில் உயர்கல்விக்கு நுழைவுத்தேர்வை அனுமதிக்க மாட்டோம் – அமைச்சர் திட்டவட்டம்!
அதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ் பரவத் தொடங்கியது. இது இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் வயதானவர்கள் மட்டுமில்லாது நடுத்தர வயதினரையும், குழந்தைகளையும் தாக்கியது. ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரித்தது. அதன் தொடர்ச்சியாக ஓமைக்ரான் வைரஸ் தொற்றும் பரவ தொடங்கியது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் கடமையாக்கப்பட்டது.
இதன் விளைவாகவும் தடுப்பூசிகள் முழு வீச்சில் செலுத்தப்பட்டதாலும் கொரோனா தாக்கம் தற்போதும் இருந்து வருகிறது. அதனால் மாநில அரசுகளை ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தியும் வருகிறது. இந்த நிலையில் அனைத்து மாநில அரசுகளும் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் 4 ம் அலை கொரோனா பரவ வாய்ப்பிருப்பதால் பொதுமக்கள் சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.