இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா – ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் வீரரும் ஆன ரவி சாஸ்திரிக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் நிதின் படேல் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி:
இந்தியா, இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகின்றன. இதில் 4வது நாள் ஆட்டம் இன்று தொடங்கி உள்ளது. கொரோனா தொற்று அச்சத்திற்கு மத்தியில் போட்டிகள் நடைபெறுவதால் வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் நிதின் படேல் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
Tokyo Paralympics : வெள்ளி வென்றார் சுஹாஸ் யதிராஜ்! ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் IAS அதிகாரி!
மேலும் ரவி சாஸ்திரி, அருண், ஸ்ரீதர் மற்றும் படேல் ஆகியோர் RT-PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டத்தின் போது இந்திய அணியுடன் ஓவல் மைதானத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. நால்வரும் ஹோட்டல் அறைகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மருத்துவ குழுவினரின் இறுதி அறிக்கைக்கு பின்னரே அணியுடன் பயணிக்க தொடங்குவர் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ENG vs IND 4வது டெஸ்ட் – நடுவர் முடிவை ஏற்க மறுத்த கேஎல் ராகுல்! அபராதம் விதிப்பு!
இந்நிலையில் ஓவல் டெஸ்டில் பங்கேற்கும் இந்திய அணியின் வீரர்கள் உட்பட அனைத்து உறுப்பினர்களும் இரண்டு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் எதிர்மறையான முடிவுகள் பெறப்பட்ட பிறகே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது இந்திய அணி 4வது நாள் ஆட்டத்தில் பேட்டிங் செய்து வருகிறது. கேப்டன் விராட் கோஹ்லி, ஜடேஜா ஆகியோர் களத்தில் உள்ளனர்.