ரூ.1,23,100 ஊதியத்தில் நிரந்தர மத்திய அரசு வேலைவாய்ப்பு !
இந்திய சுரங்க பணியகத்தில் காலியாக உள்ள தலைமை வேதியியலாளர் எனப்படும் Chief Chemist பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாக உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் 60 நாட்களுள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | இந்திய சுரங்க பணியகம் |
பணியின் பெயர் | Chief Chemist |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 60 நாட்களுள் |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:
இந்திய சுரங்க பணியகத்தில் இந்த மத்திய அரசு பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
TN Job “FB Group” Join Now
Chief Chemist வயது வரம்பு:
விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கடைசி நாள் அன்று, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும்.
Chief Chemist கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் தாதுக்கள் மற்றும் தாதுக்களின் இரசாயன பகுப்பாய்வில் அல்லது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் அல்லது தொடர்புடைய துறையில் ஆராய்ச்சி ஆய்வகமாக அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
Chemist தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் பணி நியமன நடைமுறையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பத்தார்கள் ஆரம்பத்தில் 3 வருட காலத்திற்கு நியமிக்கப்படுவார்கள். அதன் பின் செயல்திறன் அடிப்படையில் பணியில் நீட்டிக்கப்பட்ட உள்ளனர்.
TNPSC No.1 Coaching Center – Join Immediately
தலைமை வேதியியலாளர் சம்பளம்:
இந்திய சுரங்கப் பணியகத்தில் தலைமை வேதியியலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பத்தார்களுக்கு மாதம் ரூ. 123100 முதல் ரூ.215900 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மத்திய அரசு பணிக்கு தேர்வு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வெளியான நாளில் இருந்து 60 நாட்களுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.