நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 3ஆம் நாள் – இன்று (பிப்.2) தொடக்கம்!

0
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 3ஆம் நாள் - இன்று (பிப்.2) தொடக்கம்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 3ஆம் நாள் - இன்று (பிப்.2) தொடக்கம்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 3ஆம் நாள் – இன்று (பிப்.2) தொடக்கம்!

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (ஜன 31) தொடங்கியது. இந்நிலையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் 3ம் நாள் அமர்வு கூடுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்:

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி 2 நாட்கள் முடிவடைந்துள்ளது. நேற்று (பிப். 1) 2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். . இந்த கூட்டத்தொடரின் முதல் கட்டம் பிப். 13 ஆம் தேதி வரை நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (பிப் 2) பட்ஜெட் கூட்டத்தொடரின் 3ம் நாள் அமர்வு கூடுகிறது. அதில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற இருக்கிறது.

மேலும் நேற்று நிதியமைச்சர் வெளியிட்ட ஆய்வறிக்கையில் 2023- 2024ல் பொருளாதார வளர்ச்சி 6-6.8% ஆக இருக்கும் என தெரிவித்தார். 2022-2023 நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7 ஆக இருக்கும் நிலையில் அடுத்த ஆண்டில் 6-6.8% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் இன்று நாடாளுமன்றத்தில் விவாதங்களுக்கு பின்னர் பிரதமர் மோடி பதில் உரை ஆற்றுவார்,

அதன் பின் அதானி குழும பங்குகள் சரிவு, ஹிண்டர்பர்க் குற்றச்சாட்டு, எல்ஐசி பங்குகள் சரிவு, மோடி பிபிசி ஆவண பட சர்ச்சை போன்றவை குறித்து எதிர்க்கட்சிகள் விவாதிக்க கோரிக்கை வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!