இந்தியன் வங்கியில் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி பற்றிய அறிவிப்பு – முழு விவரங்கள் இதோ!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தற்போது வெளியிட்ட அறிவிப்பில் இலவசமாக சுய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் சி.சி.டி.வி கேமரா பொருத்துதல் மற்றும் பழுது நீக்கல், பெண்களுக்கான அழகுக்கலை மற்றும் வீட்டு உபயோக மின்சாதனங்கள் பழுது நீக்கல் போன்ற பணிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சிக்கான முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து தகவல்களையும் இப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டு தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Indian Overseas Bank |
பணியின் பெயர் | CCTV Camera Installation-Repair & Service, Beauty Parlour and Domestic Electrical Appliances – Repair & Service |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
இலவச பயிற்சி அளிக்கப்படும் பணியின் பெயர்கள்:
இந்தியன் வங்கியில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில், சி.சி.டி.வி கேமரா பொருத்துதல் மற்றும் பழுது நீக்கல், பெண்களுக்கான அழகுக்கலை மற்றும் வீட்டு உபயோக மின்சாதனங்கள் பழுது நீக்கல் ஆகிய பணிகளுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
கல்வி தகுதி:
- இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக அல்லது தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.
- இந்த வேலைவாய்ப்பு பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
வயது வரம்பு:
இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர்கள் 19 வயது முதல் 45 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
பயிற்சி அளிக்கப்படும் நாட்கள்:
- சி.சி.டி.வி கேமரா பொருத்துதல் மற்றும் பழுது நீக்கல் பயிற்சி – 13 நாட்கள்
- பெண்களுக்கான அழகுக்கலை பயிற்சி – 30 நாட்கள்
- வீட்டு உபயோக மின்சாதனங்கள் பழுது நீக்கல் பயிற்சி – 30 நாட்கள்
TNPSC Coaching Center Join Now
பயிற்சிக்கு பதிவு செய்யும் விதம்:
இந்த இலவச வேலைவாய்ப்பு பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் தேவையான சான்றிதழல்களின் நகலுடன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். 04.08.2022 என்பது முன்பதிவு செய்வதற்கான இறுதி நாள் ஆகும்.