இந்திய ராணுவம் (TES 49) வேலைவாய்ப்பு – ரூ.2,50,000/- ஊதியம் | சற்று முன் வெளியானது!
இந்திய ராணுவத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. Technical Entry Scheme மூலம் 90 காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.2,50,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | இந்திய ராணுவம் |
பணியின் பெயர் | Technical Entry Scheme |
பணியிடங்கள் | 90 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.12.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Indian Army காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Technical Entry Scheme- ல் காலியாக உள்ள 90 காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவ கல்வி தகுதி:
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Physics, Chemistry and Mathematics பாட பிரிவில் 60% மதிப்பெண்கள் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
- JEE (Mains) 2022 தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
Indian Army வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 16 1/2 என்றும் அதிகபட்ச வயதானது 19 1/2 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2.01.2004 முதல் 1.1.2007ம் தேதிக்குள் பிறந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ரூ.7.80 லட்சம் ஆண்டு ஊதியத்தில் NLC வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
Exams Daily Mobile App Download
இந்திய ராணுவ ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.56,100/- முதல் ரூ.2,50,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indian Army தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதியின்அடிப்படையில் (Merit) நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.12.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.