மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – இந்திய விமான சேவை ரத்து! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
உலகையே அதிக பேரழிவுக்கு தள்ளிய கொரோனா, சீனாவில் மீண்டும் நாளுக்கு நாளுக்கு அதிகரிக்க தொடங்கி உள்ளதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த அதிக கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியாவில் இருந்து ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு:
2019-ம் ஆண்டு சீனாவில் இருந்துதான் கொரோனா எனும் வைரஸ் பரவியது. இந்த கொடிய கொரோனா வைரஸ் கடந்த 3 ஆண்டுகளாக உலகை ஆட்டி படைத்து வருகிறது. உலக நாடுகள் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது, இதன் பலனாக தற்போதைய நிலையில் உலகின் பல பகுதிகளில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளும் முழு வீச்சில் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் கடந்த சில வாரங்களாக சீனாவில் மீண்டும் அதி வேகமாக பரவி வருகிறது. இதனால் சீனாவின் பல நகரங்களில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – மத்திய அரசு ஷாக் அறிவிப்பு!
உலகின் பிற பகுதிகளுக்கும் சீனாவின் புதிய கொரோனா வைரஸ் பரவுமோ என்ற அச்சம் உருவாகி உள்ளது. சீனாவின் முக்கிய நகரமான ஷாங்காயில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது. இங்கு தினமும் 2000 மேற்பட்டவர்க்கு நோய்த் தொற்று பரவி வருகிறது. ஷாங்காய் நகரில் தொற்றை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கு இடங்களை ஏற்பாடு செய்வதற்கு வீடுகளில் உள்ள மக்களை வெளியேற்றும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஷாங்காய் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் 2417 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஹாங்காங் சர்வதேச விமான போக்குவரத்து சேவையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதாவது, இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் 48 மணி நேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதில் பாதிப்பு இல்லை என்று உறுதி செய்தவர்கள் மட்டுமே ஹாங்காங் வர அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவால் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் இந்தியாவில் இருந்து ஹாங்காங் செல்வதற்கான விமான சேவையை ரத்து செய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. அதேபோல் 19 மற்றும் 23ம் தேதிகளில் ஹாங்காங்கில் இருந்து இந்தியா திரும்பும் விமான சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.