IND vs WI 3rd ODI: வெஸ்ட் இண்டிஸை ஒயிட் வாஷ் செய்யுமா இந்திய அணி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
இந்தியா, வெஸ்ட் இண்டிஸ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ள நிலையில் இன்று 3 வது ஒருநாள் போட்டி தொடங்கவுள்ளது.
எதிர்பார்ப்பில் ரசிகர்கள்:
வெஸ்ட் இண்டிஸ் இந்தியா அணிகள் மோதும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவில் மிக பெரிய மைதானமாகிய அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 10 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் களம் இறங்கிய இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து அபார வெற்றியைப் பெற்றது. இதனால் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்று முன்னிலை வகித்தது.
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஏப்ரலில் பொதுத்தேர்வு!
இதனை தொடர்ந்து 2 வது ஒருநாள் போட்டி பிப்ரவரி 9 ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் அணி கேப்டன் போலார்ட் பௌலிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து இந்திய அணி தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விக்கெட் கீப்பர் பண்ட் இருவரும் களம் இறங்கினர். இப்போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி இந்திய பேட்ஸ்மேன்களை தடுமாற செய்தனர். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 237 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை தொடர்ந்து 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் களம் இறங்கியது வெஸ்ட் இண்டிஸ் அணி.
IPL 2022: மெகா ஏலத்தில் கேப்டனை தேடும் 3 அணிகள் – ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு!
முதலில் பொறுமையாக விளையாடிய வெஸ்ட் இண்டிஸ் பேட்ஸ்மேன்கல் பின்பு தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் 46 ஓவர் முடிவில் 193 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் 2 வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ள நிலையில் இன்று 3 வது ஒருநாள் போட்டி தொடங்கவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி பலபரிட்சையில் ஈடுபடும் என்று தெரிகிறது. 3 வது போட்டியிலும் ரோஹித் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று இத்தொடரில் வெஸ்ட் இண்டிஸை ஒயிட் வாஷ் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.