ஜனவரி 6 முதல் பிரிட்டனுக்கு விமான சேவை – மத்திய அரசு அறிவிப்பு!!
இங்கிலாந்தில் பரவி வரும் உருமாறிய கொரோனா தொற்று காரணமாக இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு டிசம்பர் 21ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்ட நிலையில், அந்த விமான சேவைகள் ஜனவரி 6ம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவித்து உள்ளார்.
விமான சேவை:
இந்தியாவில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் பரவி வரும் வீரியம் மிகுந்த உருமாற்றம் பெற்ற புதிய கொரோனா வைரஸ் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை 29 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பியூசி வகுப்புகள் தொடக்கம்!!
இதனால் டிசம்பர் 21 முதல் இந்தியா இரு நாடுகளுக்கும் இடையிலான விமான சேவைகளுக்கு தடை விதித்தது. ஆரம்பத்தில் தடை டிசம்பர் 31 வரை இருந்தது, ஆனால் பின்னர் ஜனவரி 7 வரை நீட்டிக்கப்பட்டது. நேற்று, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஜனவரி 8 முதல் தடைசெய்யப்பட்ட விமான சேவை ஓரளவிற்கு தொடங்கப்படும், குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் என அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று வெளியிட்டு உள்ள ட்விட்டர் பதிவில், இந்தியாவில் இருந்து இங்கிலாந்து செல்லும் விமானங்கள் ஜனவரி 6 ஆம் தேதி முதல் இயங்கலாம் என்றும், இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு ஜனவரி 8 ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கும் எனவும் அறிவித்து உள்ளார். ஒவ்வொரு வாரமும் 30 விமானங்கள் இயக்கப்படும். இந்த விதிமுறைகள் ஜனவரி 23 வரை செல்லுபடியாகும் என கூறியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்