இந்தியாவில் புதிதாக 36,571 பேருக்கு கொரோனா தொற்று – 540 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,571 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 540 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 36,571 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,23,58,829 ஆக அதிகரித்துள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் தொற்று பாதிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதனை தடுக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பொது விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
இதுவரை இந்தியா முழுவதும் 57,22,81,488 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகள் நல்ல செயல்திறன் கொண்டவையாக உள்ளது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது. மேலும் வரும் செப்டம்பர் மாதம் முதல் குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 540 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,33,589ஆக அதிகரித்துள்ளது.
கர்ப்பமாக இருக்கிறோமா? சந்தேகத்தில் அர்ச்சனா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
மேலும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பால் நேற்று ஒரே நாளில் மட்டும் 39,555 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,15,61,635 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,65,605 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.12% ஆக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.