இந்தியாவில் ‘ஸ்புட்னிக் – வி’ ரஷ்ய தடுப்பூசி பயன்பாடு – மத்திய அரசு அறிவிப்பு!!
ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ள ‘ஸ்புட்னிக் – வி’ புதிய தடுப்பூசி அடுத்த வாரம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதிய தடுப்பூசி:
நாட்டில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்துள்ளது. பாதிப்பு அதிகரிக்க அதிகரிக்க மக்களுக்கு அச்சம் அதிகரித்துள்ளது. இதுவரை நமது நாட்டில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் என்ற இரண்டு வகையான தடுப்பூசிகள் ஜனவரி மாதம் முதல் பயன்பாட்டுக்கு வந்தது. தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான காலம் குறைவாக இருந்த காரணத்தால் முதலில் முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் செலுத்தப்பட்டது.
நாடு முழுவதும் மே 31 வரை இரவு ஊரடங்கு அமல் – இலங்கை அரசு அறிவிப்பு!!
அடுத்த கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோயுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. மத்திய மற்றும் மாநில அரசுகள் தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு பல விழிப்புணர்வு மூலம் வலியுறுத்தி வருகின்றனர். பொதுமக்களும் ஆவலுடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதனால் நாட்டிற்கு தேவையான அளவு தடுப்பூசி இல்லாமல் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதனை அடுத்து மற்ற நாடுகளில் இருந்து தடுப்பூசி இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. ரஷ்ய நிறுவனத்தின் தயாரிப்பான ‘ஸ்புட்னிக் – வி’ தடுப்பூசி உற்பத்தி ஜூலை மாதம் முதல் இந்தியாவில் தொடங்கப்பட உள்ள நிலையில், மே 1ம் தேதி ரஷ்யாவில் இருந்து முதல் கட்டமாக 1.5 லட்சம் தடுப்பூசிகள் ஹைதராபாத்திற்கு வந்தது. மேலும் நாளை 1.50 லட்சம் டோஸ் தடுப்பூசி இந்தியாவிற்கு வர உள்ளது என்றும் அடுத்த வாரம் முதல் ‘ஸ்புட்னிக் – வி’ தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்