இந்தியா டூ அபுதாபி பயணிகள் விமான சேவை – ஆகஸ்ட் 10 முதல் தொடக்கம்!
கொரோனா தொற்றின் காரணமாக நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் விமான சேவை மீண்டும் துவங்கவுள்ள நிலையில் வரும் 10ம் தேதி முதல் இந்தியா டூ அபுதாபி விமான சேவை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிற நாடுகளில் இருந்து அபுதாபி வந்து மற்ற நாடுகள் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விமான சேவை:
உலகம் முக்குவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தாக்கத்தை குறைக்க நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கினால் போக்குவரத்து துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஒரு நாட்டில் இருந்து பிற நாடுகளுக்கு பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் விமான சேவையும் ரத்து செய்யப்பட்டிருந்தது. கொரோனா 2வது அலையில் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் விகிதம் அதிகமாக இருந்ததன் காரணமாக விமான சேவை முடக்கப்பட்டது.
காதல் பட நடிகருக்கு கொலை மிரட்டல் – டிக்டாக் பிரபலம் GP முத்து மீது காவல்துறையில் புகார்!
இதனால் இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததனால் மக்கள் முடக்கப்பட்டிருந்தனர். இந்தியாவில் நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்த நிலையில் துபாய் முதலான பல நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தன.
TN Job “FB Group” Join Now
தற்போது நோய்த்தோற்று பரவும் விகிதம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான போக்குவரத்தானது மீண்டும் இயங்கவுள்ளது. இதனடிப்படையில் வரும் 10ம் தேதி முதல் இந்தியாவிற்கு, அபுதாபியிலிருந்து விமான சேவை தொடங்க உள்ளது. அதே போல் பிற நாடுகளில் இருந்து அபுதாபி வந்து இணைப்பு விமானம் மூலமாக மற்ற நாடுகளுக்கு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.