சிரியாவில் பயங்கரமான நிலநடுக்கம் – ஏராளமானோர் பாதிப்பு.. மருந்து பொருட்களை அனுப்பும் இந்தியா!
சிரியாவில் நேற்று (பிப்.06) திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏராளமான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் இந்தியா சிரியாவுக்கு உதவும் வகையில் மருந்து பொருட்களை அனுப்பவுள்ளது.
மருந்து பொருட்கள்:
துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது. அந்த கட்டிடங்களில் இருந்த நபர்கள் வெளியே வர முடியாமல் சிக்கி கொண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். துருக்கியில் மட்டும் சுமார் 3, 700 கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது
லிங்கை கிளிக் செய்தால் வரும் ஆபத்து – டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிகை!
அதனை தொடர்ந்து 1600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிந்து விழுந்த கட்டிடங்களில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா நாடுகளுக்கு மற்ற உலக நாடுகள் உதவி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் துருக்கியில் நிலநடுக்கத்தால் சிக்கி காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிக மருத்துவமனை அமைத்து தருவதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தியா சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தேவையான மருந்து பொருட்களை அனுப்பி வைக்க உள்ளது. விமானப்படையின் சி-120 சூப்பர் ஹெர்குலஸ் சரக்கு விமானத்தில் இந்த மருந்து பொருட்கள் அனுப்பப்படவுள்ளது.