இந்தியாவில் மார்ச் 27 முதல் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு அனுமதி – மத்திய அரசு அறிவிப்பு!

0
இந்தியாவில் மார்ச் 27 முதல் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு அனுமதி - மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவில் மார்ச் 27 முதல் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு அனுமதி - மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவில் மார்ச் 27 முதல் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு அனுமதி – மத்திய அரசு அறிவிப்பு!

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது வெளியான அறிவிப்பின்படி, வருகிற மார்ச் 27 முதல் மீண்டும் அவற்றிற்கு அனுமதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

விமான சேவைகள்:

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு இருந்தன. மாநிலங்கள் வாரியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு போடப்பட்டது. இதனால் கொரோனா நோய்தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது. எனவே ஊரடங்கிலும் அதிகளவிலான தளர்வுகள் அளிக்கப்பட்டு தொழில்துறைகள் முழுவீச்சில் செயல்பட தொடங்கி உள்ளது. இருப்பினும் மாறுபாடு அடைந்த கொரோனா பாதிப்புகளின் விளைவாக சர்வதேச விமான சேவைகளுக்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, சர்வதேச விமானங்கள் மீதான தடையை இந்தியா இன்று நீக்கியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை!

அதன்படி கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்ட வெளிநாட்டு விமான சேவைகள் மார்ச் 27 முதல் மீண்டும் இயங்க தொடங்கும். உலகம் முழுவதும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு கொரோனா பரவல் சற்று கட்டுக்குள் வந்துள்ளதால் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு ஆலோசனைகளுக்கு பின்னர் இம்முடிவை எடுத்துள்ளது. மேலும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட இரு நாடுகளும் பரஸ்பர எல்லைக்குள் விமானங்களை இயக்க அனுமதிக்கும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் மார்ச் 19 (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கல்வித்துறை உத்தரவு!

கொரோனா பரவலை தடுக்க முன்னதாக மார்ச் 2020 அன்று முதல் சர்வதேச விமான சேவைகள் நிறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் விமான நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்தன. உள்நாட்டு விமானங்கள் மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தது. தற்போது சர்வதேச பயணங்களுக்கும் அரசு அனுமதி வழங்கி உள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!