இந்தியா போஸ்டல் பேமன்ட் வங்கியின் வட்டி குறைப்பு அறிவிப்பு!
இந்திய தபால் துறை மூலமாக செயல்படும் இந்தியா போஸ்டல் பேமன்ட் வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்கியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கி வந்த 2.75 சதவீத வட்டியை தற்போது 2.50 ஆக குறைத்துள்ளது.
இந்தியா போஸ்டல் பேமன்ட் பேங்க்:
இந்திய தபால் துறை மூலம் இந்தியா போஸ்டல் பேமன்ட் வங்கி சேவையை பிரதமர் மோடி 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார். இதன் மூலமாக பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே வங்கி கணக்கை தொடங்கி பணத்தை தங்களது கணக்கில் செலுத்தவும், எடுக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி இலவச கல்வி – மாணவர் சேர்க்கை!
மேலும் இதற்காக தபால் ஊழியர்களுக்கு செல்போன் மற்றும் பயோ மெட்ரிக் எந்திரம் வழங்கப்படுகிறது. இதைக்கொண்டு தபால் ஊழியர்கள் பொதுமக்களை நேரடியாக சென்று சந்தித்து வங்கி கணக்கு தொடங்குகிறார்கள். கணக்கு தொடங்குவதற்கு முகவரி மற்றும் அடையாள சான்று ஆகியவை தேவை அதன் மூலமாக எளிதாக வங்கி கணக்கு தொடங்கலாம்.
இந்த வங்கியில் சாதாரண, அடிப்படை மற்றும் டிஜிட்டல் என மூன்று வகையான சேமிப்பு கணக்குகள் வழங்கப்படுகிறது. இந்த சேமிப்பு கணக்குகளுக்கு ஏற்கனவே 4 சதவிகிதமாக இருந்த வட்டி கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 3.50 சதவிகிதமாகவும், ஏப்ரல் 1 முதல் 3 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் காரணமாக கடந்த மே 1 ஆம் தேதி முதல் 2.75 ஆக குறைக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
தற்போது இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வங்கி கணக்கில் ஒரு லட்சம் வரை இருப்புத்தொகை கொண்டவர்களுக்கு 2.75 ஆக இருந்த வட்டி விகிதம் 2.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இருப்புத்தொகை, ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை கொண்ட கணக்குகளுக்கு, 2.75 சதவீத வட்டி விகிதமே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வரும் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.